சம்பவ தினமான நேற்று முன்தினம் (14) இரவு 7 மணியளவில் பிரதி தவிசாளார் அவரது விடுதியில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது மதில் மீதேறி வந்த இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் அவர் சத்தமிட்டபோது அங்கிருந்த அவரது தந்தை ஓடிச்சென்றதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு - ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!
2021-01-16 23:17
இலங்கைச் செய்திகள்
பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் வாள்வெட்டுக்கிலக்காகியுள்ளார்.
அவர் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவரை வாள்கள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் அவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் (14) இரவு 07 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.